நம்ம எலேச்சனுக்கு Google Home Page இனை மாற்றுவார்கள் என்றால் எப்படி இருக்கும் என்று ஒரு சிந்தனை. யார் மனதையும் புண்படுத்தவோ கேலி செய்யவோ அல்ல. காமெண்டுகள் வரவேற்கப்படுகின்றன.
VPN கள் நம் அடையாளத்தை முழுமையாக இரகசியப்படுத்துமா? நிச்சயமாக இல்லை. எந்தவொரு VPN களாலும் நமது 100% மான இரகசியத்தன்மைய உறுதி செய்ய முடியாது. பெரும்பாலான VPN சேவைகள் பாவனையாளரின் Browsing History களை தமது Serverகளில் சேமிக்கின்றன. சேவையின் தரத்தை உயர்த்துதல் என்று சொல்லப்பட்டாலும் "தேசிய பாதுகாப்பு" என்று வரும்போது அரசாங்கங்களுக்கு நமது எஸ்டிடியை அள்ளிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் VPN வழங்குநர்களுக்கு உள்ளது. நாம் ஏற்கனவே அலசிய Samrando எமது History களை சேமிப்பதில்லை என்பது நமக்கு ஆறுதல். Tor போன்ற சமூக ஆர்வலர்களால் பராமரிக்கப்படும் சேவைகளிலதொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்கள் நுழைந்து விடுவதும் உண்டு. .. பிறகு நமது அனானிமிட்டி அம்பேல். NSA எப்போதும் TOR சேவையில் ஒரு கண்வைத்திருக்கிறது. எமது சாதாரண இணையப் பாவனையின்போது இணையத்தளங்களால் பாவனையாளரின் இலகுக்காக Cookie கள் உருவாக்கப்பட்டு நிரந்தரமாக எமது கணினிகளில் விட்டுவிடப்படுகின்றன. நாம் VPN களுக்கூடாக இணையத்தை பயன்படுத்தும்போது கூட இவ்வகையான Cookie கள் நமது உண்மையான அடையாளத்தை குறிப்பிட்ட தளங்களுக்கு வழங்கும் ஆ...
இறந்து கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள். மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம். அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா? பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள். இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல தங்குமிடங...
“நகைகளைத் திருடும்வரை சிலைகள் என்ன செய்து கொண்டிருந்தனவாம்?” நண்பர் கேட்டார். அவர் ஒரு சமூக ஆர்வலர், சீர்திருத்தவாதி, படித்தவர் இறைவன் மேல் அளவு கடந்த பக்தியுடையவர். இந்தக் கேள்வி மூலம் நண்பர் எதனை நாடுகிறார் என்பது எனக்குத் தெரியாமலுமில்லை. இருப்பினும் இது பல விடயங்களை என்னுள் சிந்திக்க வைத்தது. இதனைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு நண்பர் “நம் பள்ளியில் தொழுகையாளிகளைச் சாய்க்கும்போதும் அல்லது நம் பள்ளிகள் தகர்க்கப்படும்போதும் நம் இறைவன் எங்கேயிருந்தான்?” என்று இன்னொரு சமூகத்தினன் கேள்வி எழுப்பும்போது எம்மால் என்ன பதில் கூற முடியும் என்று வினாவெழுப்பினான். உண்மைதான் இங்குதான் யாதாகிலும் ஒரு வகையில் இறைநம்பிக்கை கொண்ட நாம் பிரிவினைவாதிகளால் துண்டாடப்படுகிறோம். அவர்களின் ஒரே இலக்கு நம் ஒற்றுமையை பிரிப்பது மட்டுமே. ஏனெனில் மனிதர்களை, சமூகங்களை பிரித்து வைப்பதில் கிடைக்கும் அரசியல் இலாபம் ஒற்றுமைப்படுத்துவதில் கிடைப்பதில்லை. மதங்களோ மனித உள்ளங்களில் ஒற்றுமையை விதைத்துவிட விழைகின்றன. எப்போதெல்லாம் இறை நம்பிக்கை கொண்ட எங்களின் சொற்கள், செயல்கள் ஒற்றுமையை ஒடித்து விடிகின்றனவோ அப்போதே நா...
Comments
Post a Comment