Transportation Security Admin Statement - "The watch lists are important layers of security to prevent individuals with known or suspected ties to terrorism from flying..."
தமிழர் - முஸ்லிம் உறவுகள் கொஞ்சம் கொஞ்சமாக கசந்துவரத் தொடங்கிய காலம் அது. இருபது நாட்களுக்கு முன்னர் என்று நினைக்கிறேன். காத்தான்குடியைச் சேர்ந்த 200 க்கும் அதிகமான சகோதரர்கள் குருக்கள்மடப்பகுதியில் வியாபாரப்பொருட்களுடன் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார்கள். அன்றிலிருந்து ஒரு அச்சமான சூழல் எம்மூரைத் தொற்றிக் கொண்டிருந்தது. நான்கு நாளைக்கு முன்னமே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அன்றைக்கெல்லாம் நாட்கணக்கில் மின்சாரம் துண்டிக்கப்படுவது ஒரு மோசமான அறிகுறி. புலிகளின் தாக்குதல்கள் எப்போதும் மின்சாரத் துண்டிப்பின் பின்னரே நிகழும். ஏதோவொரு அநியாயம் நிகழப்போவது பற்றி நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். இரவில் தூங்காமல் விழித்திருப்போம். ஆனால் ஆட்கள் நடமாடும் இஷா தொழுகை நேரத்தில் இவ்வாறான கோரச் சம்பவம் ஒன்று நிகழும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சலாஹுத்தீன் ஹாபிசும் நானும் முதலாம் வகுப்புத் தோழர்கள். முதலாம் குறிச்சிப் பள்ளியில் 7:25 வரை இருந்துவிட்டு டீ குடிக்க வீட்டுக்குப் போகிறேன் என்று சலாஹுத்தீனிடம் சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன். சலாஹுத்தீன் இஷா வரைக்கும் குர்ஆன் ஓதிக்கொண்டிருந...
தமிழிலும் பல்வேறுபட்ட மொழிகளிலும் type செய்வதற்கு google IME பெரிதும் உதவுகிறது. உண்மையில் இது ஒரு பழைய சரக்கு. இருப்பினும் நம் நண்பர்கள் இன்னும் தமிழில் தட்டச்சு செய்வதற்கு சிரமப்படுவதாகவே தோன்றுகிறது. அதற்காக இந்த பதிவு அவர்களுக்கு சமர்ப்பணமாகட்டும்.
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) சூரியனின் முதல் ஒளிக்கதிர் இந்த பூமியை வந்தடையும் முன்னர் தூதரின் நாமம் பெயர் ஒலிக்கத் தொடங்குகிறது. பூமியின் ஒவ்வொரு சிறு அசைவுக்கும் உலகின் எங்கோவோர் கடைக்கோடியிலாவது இறைத்தூதரின் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும். இது உலகில் பிறந்த எந்தவோர் மனிதருக்கும் வழங்கப்படாத கண்ணியமும் புகழுமாகும். இப்படிப்பட்ட ஒரு சிறப்பான மனிதரை யாரால் எத்தனை முறை அவரது கண்ணியத்துக்கு இழுக்கை உண்டாக்கமுடியும்? பிரித்தாழ்தலும் பிரச்சனைகளை தோற்றுவித்து காரியம் சாதித்தாலும் மேற்கின் பிரதான தாரக மந்திரங்கள். அந்த வகையிலேயே இறைதூதர் அவமதிப்பு வெளியீடுகளை நோக்கவேண்டியிருக்கிறது. இதன் பின்னணி அமெரிக்க தேர்தலோ , சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியின் சரிவை தாமதப்படுத்தலோ அல்லது லிபியாவின் வளங்களை சுரண்டுவதற்கான முன்னேற்பாடுகளாகவோ இருத்தல்கூடும். இவ்வாறான சூழ்நிலைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதே எமக்கு முன்னால் உள்ள கேள்வியாகும். டென்மார்க் கேலிச்சித்திரத்துக்கு பதிலடி கொடுக்கும் எண்ணத்தோடு உருவான சமி யூசுப் இன் வெளிவர இருக்கும் இசைத்தட்டில் உள்ள ஒரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ...
Comments
Post a Comment