மாரி காலத் தவளைகள்

frogs

“மெயினால மட்டும்தான் போகலாமாம்… ஹெல்மட்டை எடுத்துக்குவம் ட்ரபிக்குக்கு இல்லாட்டியும் மழைக்காவது உதவும்"

“டேய்.. தடுமல் புடிக்கும்டா உள்ளுக்கு வாடா"

“இந்த முறை போன முறையை விட கூட வரும்போல கிடக்கு…”

“கொஞ்சம் வெட்டாந்து பேஞ்சாலும் பருவால்ல…இப்பிடி பெய்யிதே”

“அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது"(???!!!)

“இப்பதானே ஸ்டார்ட் பண்ணி இரிக்கி.. இனி நத்தார் மழை எல்லாம் பெய்யும்"

“ஸ்லோவா ஓடு மச்சான் சறுக்கினா அவ்வளவுதான்"

“இரவைக்கும் பேஞ்சா ஊட்டுக்க தண்ணி வந்துடும்"

“இந்த நா..கள் இந்த …… எல்லாம் நாட்டுறத்த இந்த றோட்ட செஞ்சாலாவது எவ்வளவு நல்லா இரிக்கும்"

“நாம என்ன செய்யிற அல்லாஹ்ட நாட்டம்"

“இதுக்குத்தான் சென்ன.. எங்களுக்கு போட்டு போடுங்க எண்டு”

“நீங்க வந்திருந்தா என்ன மாரிய நிப்பாட்டி இருப்பீங்களோ?”

“பள்ளில நல்லா சோறா தரப்போறானுகள்? முட்டஅரிசிச் சோறு அத விட அரிச தரலாமே”

“இந்த றோட்ட உசத்தின புறகுதான் ஊட்டுக்க தண்ணி வருகுது”

“ஊட்டுலையும் நிம்மதி இல்ல ரோட்டுலையும் நிம்மதி இல்ல"

“இன்சயும் ஒழுகுதுகா… இஞ்சப்பாரு…”

“அல்லாஹ்வே மழையை நிப்பாட்டிடு"

“முகத்துவாரம் ஓடுது போனா குளிக்கலாம்"

“ஹி ஹி வெள்ள நிவாரணம் குடுக்க ரெடியாகிறம்”

 

கோடை வரும்வரை இனி மாரிக்கத்தல்தான்… அடுத்தமாரிக்கும் இதே கத்தல்தான் “மாரித் தவளைகள்"…

 

********************************************************

 

இன்றைய மழையில் பலமாக நனைந்து வயிறு பசிக்க ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தோம்…

“ப்லேன்டீ ரெண்டு தாங்க நானா” என்றேன்

பத்து நிமிடங்களின் பின் ஒரு கப் மேசைக்கு வந்தது…

தம்பி கப் ஒண்டுதான் இரிக்கி… என்று கையை காட்டினார்

ஒரு ஐந்து அல்லது ஆறாம் தரத்தில் படிக்கும் இரு பெண் பிள்ளைகள் கையில் ஒரு எழு அல்லது எட்டு டீ கப்களுடன்…

“யாருக்கு மன டீ”

“டீச்சர்ஸ்க்கு..”

“அதுக்கு இந்த மழையில நீங்களா வந்தீங்க…”

“எந்த ஸ்கூல் நீங்க?”

பாடசாலையின் பெயரைச் சொன்னாள் அந்தச் சிறுமி….

பெயரில் என்ன இருக்கிறது…? ஆசிரியர்களிடம் மாணவர்கள் வைத்திருக்கும் மரியாதைதான் ஆச்சரியப்படுத்துகிறது.  “ஆசிரியர் தினம்" போன்று கட்டாயம் “மாணவர் தினம்” ஒன்று தேவைப்படுகிறது. மாணவர்கள் என்றால் யார் என்று ஆசிரியர்களுக்கும் கற்பிக்க வேண்டியிருக்கிறது.

Comments

  1. நம்ம ஊரு கத அப்படியே இருக்கு.மழைக்கு நம்மட ஆக்களின் comment.ஊருல மழை பெய்யிறது இங்க தெரியுது.

    ReplyDelete
  2. கமெண்ட்ஸ் க்கு நன்றிகள் சப்ரி..அதென்ன BG Team புதுசா இருக்கு ...

    ReplyDelete
  3. என்ன செய்ய... வானத்துக்கு கீழே பூமிக்கு மேலே வீட்டக்கட்டிட்டு வாழ்ந்தால் மழை பெய்யத்தான் செய்யும். ரோட்டில் வெள்ளம் வரத்தான் செய்யும். இருந்தாலும் மாரிகாலத்துல வார மோக்கைகளின் அட்டகாசம்தான் தாங்க முடியிரதில்லை...

    ReplyDelete
  4. மழை பெய்யிறது இறைவனின் கொடை.. எமது வாழ்வாதாரமும் கூட.. இருப்பினும் மாரி காலத்தில் நமதூரில் ஏற்படும் சீர்க்குலைவுகள் சொல்லிமாளாதவை. "மாரி கால மோக்கைகள்" இதுவும் நல்லாத்தான் இருக்கு.. நன்றி முனீர்..

    ReplyDelete
  5. nice
    silarukku sila kalam
    silarukku sila kalam pidikiraze
    allah is great
    mala peyya pohuzu paper kondu wanga kahiza kappal seyanum
    camera enga
    anda sweter enge weythen?
    kuruwi naleindu nikuraza paruga
    anda roomla siver buckket wechahittaza?
    tick tick tick ok sound ketkuzu
    biscuit inikku ellame mudindidum
    with a milk coffee near the window...
    thinking of
    naley
    pulweli sirikkume
    pookkalum irukkume
    panith thuli jolikkume

    izuwum aze neram
    aze nal
    also teachers r teachers
    they know students

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Flutter Handling Null Value in TextField

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - #டவுட்டுகள்

Does Fetching a Parent Collection in Firebase Firestore Return Its Entire Sub-Collection Tree?