August 03, 1990

தமிழர் - முஸ்லிம் உறவுகள் கொஞ்சம் கொஞ்சமாக கசந்துவரத் தொடங்கிய காலம் அது. இருபது நாட்களுக்கு முன்னர் என்று நினைக்கிறேன். காத்தான்குடியைச் சேர்ந்த 200 க்கும் அதிகமான சகோதரர்கள் குருக்கள்மடப்பகுதியில் வியாபாரப்பொருட்களுடன் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார்கள். அன்றிலிருந்து ஒரு அச்சமான சூழல் எம்மூரைத் தொற்றிக் கொண்டிருந்தது. நான்கு நாளைக்கு முன்னமே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அன்றைக்கெல்லாம் நாட்கணக்கில் மின்சாரம் துண்டிக்கப்படுவது ஒரு மோசமான அறிகுறி. புலிகளின் தாக்குதல்கள் எப்போதும் மின்சாரத் துண்டிப்பின் பின்னரே நிகழும். ஏதோவொரு அநியாயம் நிகழப்போவது பற்றி நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். இரவில் தூங்காமல் விழித்திருப்போம். ஆனால் ஆட்கள் நடமாடும் இஷா தொழுகை நேரத்தில் இவ்வாறான கோரச் சம்பவம் ஒன்று நிகழும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சலாஹுத்தீன் ஹாபிசும் நானும் முதலாம் வகுப்புத் தோழர்கள். முதலாம் குறிச்சிப் பள்ளியில் 7:25 வரை இருந்துவிட்டு டீ குடிக்க வீட்டுக்குப் போகிறேன் என்று சலாஹுத்தீனிடம் சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன். சலாஹுத்தீன் இஷா வரைக்கும் குர்ஆன் ஓதிக்கொண்டிருந...